தொடங்கியது கறிவிருந்து.. தேர்தல் திருவிழா உற்சாகம்..

தொடங்கியது கறிவிருந்து.. தேர்தல் திருவிழா உற்சாகம்..

சட்டமன்றத் தேர்தல் ஜுரம் தமிழக  அரசியல்வாதிகளை ஆட்டிப்படைக்க ஆரம்பித்துவிட்டது. இப்போது மட்டும் அவர்களின் கண்ணுக்கு அப்பாவிப் பொதுமக்கள் பளிச்சென தெரிகிறார்கள். வாக்குகளை வாங்கிக் குவிக்க வியூகங்கள் வலது மூளையில் இருந்து வழிந்து விழத் தொடங்கிவிட்டன. அடக்க முடியாத ஆர்வத்தில் வாக்காளர்களை கொண்டாடவும் மகிழ்விக்கவும் அரசியல்வாதிகள் களம் இறங்கியிருக்கின்றனர். இதில் கட்சி வேறுபாடே இல்லை. எல்லோரும் ஒன்றுதான். சிவகங்கை மாவட்டம், மானாமதுரை தொகுதி அ.தி.மு.க எம்.எல்ஏ நாகராஜன் எல்லோரையும் முந்திவிட்டார். 2019 ஆம் ஆண்டு இந்தத் தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் 8, […]

Read More
 புதுவை அரசு கவிழ்ப்பு! ஜனநாயகத்துக்கு சவால்!!

புதுவை அரசு கவிழ்ப்பு! ஜனநாயகத்துக்கு சவால்!!

உலக அரங்கில் இந்தியாவுக்கு மிகப்பெரிய ஜனநாயக நாடு என்ற பெயர் உண்டு. ஆனால் புதுச்சேரியில் அரங்கேறியுள்ள அரசியல் நிகழ்வுகள் இந்திய நாடாளுமன்ற ஜனநாயகத்தை கேள்விக்குறியாக்கி உள்ளன என்றால் மிகையில்லை.  தென்னிந்தியாவைப் பொறுத்தவரை கர்நாடகாவில் கால் ஊன்றிவிட்ட பா.ஜ.க, அடுத்த இலக்காக புதுவையில் அரசியல் சதுரங்கத்தை தொடங்கியது.  கிரண்பெடியை புதுச்சேரி துணைநிலை ஆளுநராக நியமித்து முதலமைச்சர் நாராயணசாமிக்கு குடைச்சல் கொடுத்த மத்திய பா.ஜ.க அரசு, தேர்தல் நெருங்கிய நிலையில் ஆளும் கூட்டணி எம்எல்.ஏக்களைப் பிரித்து அரசை கவிழ்த்தே விட்டது.  முதலமைச்சர் […]

Read More
 சலுகை சரவெடி தயார்.. பெரும் எதிர்பார்ப்பில் இடைக்கால பட்ஜெட்…

சலுகை சரவெடி தயார்.. பெரும் எதிர்பார்ப்பில் இடைக்கால பட்ஜெட்…

தமிழக சட்டமன்றத் தேர்தல் தேதி இன்னும் ஓரிரு நாளில் வெளியாகவுள்ள நிலையில், தமிழக அரசு தனது இடைக்கால பட்ஜெட்டை சட்டப்பேரவையில் நாளை தாக்கல் செய்கிறது. இது தேர்தல் பட்ஜெட்டாக இருக்கும் என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை. எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதிகளை அள்ளி வீசி வருவதால் பதிலடியாக ஆளும் கட்சியும் சலுகை அறிவிப்புகளை வெளியிட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. இதற்கான மிகப்பெரிய வாய்ப்பே இடைக்கால பட்ஜெட்டும், 110-வது விதியின் கீழ் புதிய அறிவிப்புகளை வெளியிடுவதும்தான்.  […]

Read More
 தமிழகத்தின் கெஜ்ரிவால் ஆவாரா சகாயம்… அதிரடி அரசியல் பிரவேசம்…

தமிழகத்தின் கெஜ்ரிவால் ஆவாரா சகாயம்… அதிரடி அரசியல் பிரவேசம்…

தலைநகர் டெல்லி அரசியலில் அதிரடி திருப்பத்தை உருவக்கியவர் அர்விந்த் கெஜ்ரிவால். ஐ.ஆர் எஸ் அதிகாரியான கெஜ்ரிவால், ஆம் அத்மி கட்சியைத் தொடங்கி மிகக் குறுகிய காலத்திலேயே டெல்லியில் ஆட்சியைப்  பிடித்தார்.  இதேபோல்  தமிழகத்திலும் பிரபலமான, நேர்மையான ஐ.ஏ.எஸ் அதிகாரி அரசியலில் குதித்துள்ளார். அவர்தான் சகாயம். கடந்த ஆண்டு அவர் பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்றார். இளைஞர்களின் அமோக ஆதரவைப் பெற்றுள்ள சகாயம், மக்கள் தொடர்ந்து அழைப்பு விடுத்ததாலேயே அரசியலுக்கு வந்திருப்பதாகத் தெரிவித்திருக்கிறார்.  சென்னை, ஆதம்பாக்கத்தில் ‘ஊழலை ஒழிக்க அரசியல் […]

Read More
 ச்சீ.. ச்சீ ..ச்சீ இந்தப்பழம் புளிக்கும். விரக்தியில் விஜயகாந்த்..

ச்சீ.. ச்சீ ..ச்சீ இந்தப்பழம் புளிக்கும். விரக்தியில் விஜயகாந்த்..

சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விரும்பும் தேமுதிகவினர் 234 தொகுதிகளிலும் விருப்ப மனு அளிக்கலாம் என அக்கட்சித் தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு அதிமுக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜயகாந்த் நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் சட்டமன்றத் தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் போட்டியிட விரும்பும் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் விருப்ப மனுக்களை சென்னை கோயம்பேட்டில் உள்ள தலைமை அலுவலகத்தில்  பிப்ரவரி 25 ஆம் தேதி முதல் மார்ச் 5ஆம் தேதி வரை பெற்றுக்கொண்டு, பூர்த்தி செய்து வழங்கலாம் […]

Read More
 பெயிலான ஓ.பி.எஸ்.. ஜெயலலிதா சர்டிபிகேட்

பெயிலான ஓ.பி.எஸ்.. ஜெயலலிதா சர்டிபிகேட்

ஓபிஎஸ் நிர்வாகத் திறமையற்றவர் என்பதற்கு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா எழுதிய கடிதமே சான்று என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தேனி மாவட்டம்,  உத்தமபாளையத்தில் ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ பிரச்சார நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய அவர், ஓபிஎஸ் நாட்டுக்கும் மக்களுக்கும் ஏன் தொகுதிக்கும் கூட ஒன்றும் செய்யவில்லை என்று சாடினார். இவரை இரண்டு முறை முதல்வராக்கிய ஜெயலலிதாவுக்கும் மூன்றாவது முறையாக முதல்வராக்கிய சசிகலாவிற்கும் ஓபிஎஸ் உண்மையாக இருந்ததில்லை என்றும் அவர் கூறினார்.  ஜெயலலிதா மரணத்தில் மர்மம் உள்ளது […]

Read More
 மதுக்கடை வருமானம்! அரசுக்கு அவமானம்!!

மதுக்கடை வருமானம்! அரசுக்கு அவமானம்!!

மதுக்கடைகள் மூலம் வருகின்ற வருமானம் அரசுக்கு மிகப்பெரிய அவமானம் என்று மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  போதை பழக்கத்தால் குற்றங்கள் பெருகும் என்று குற்றம்சாட்டி இருக்கிறார் . மதுக்கடைகளின் எண்ணிக்கையை படிப்படியாகக் குறைப்பதாக வாக்குறுதி அளித்து,  அதை இந்த அரசு மறந்துவிட்டது. மது விற்பனையை அரசே ஏற்று நடத்த வேண்டியதில்லை. இதற்காக ஐஏஎஸ் அதிகாரிகளை நியமித்து இலக்கு நிர்ணயிக்க வேண்டிய தொழிலும் இல்லை. கல்வி, சுகாதாரம் […]

Read More
 நம்பிக்கை வாக்கெடுப்பில் தப்புவாரா நாராயணசாமி?

நம்பிக்கை வாக்கெடுப்பில் தப்புவாரா நாராயணசாமி?

புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி வருகிற 22ஆம் தேதி மாலை 5 மணிக்குள் சட்டப்பேரவையில்  பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று  ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கெடு விதித்துள்ளார். பதவியேற்ற முதல் நாளிலேயே அவர் இந்த அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. புதுச்சேரியில், காங்கிரஸ் கட்சியில் 15 எம்எல்ஏக்கள், திமுகவில் 3 எம்எல்ஏக்கள், சுயேச்சை எம்எல்ஏ ஒருவர் என 19 எம்எல்ஏக்கள் ஆதரவுடன் நாராயணசாமி ஆட்சி நடைபெற்று வந்தது. இந்நிலையில் கட்சி தாவல் தடைச் சட்டத்தின் கீழ் பாகூர் […]

Read More
 உழவுத் தொழில் காக்க உயிர் துறப்போம்! எச்சரிக்கும் விவசாயிகள்….

உழவுத் தொழில் காக்க உயிர் துறப்போம்! எச்சரிக்கும் விவசாயிகள்….

புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி பஞ்சாப்,  ஹரியானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் விவசாயிகள் நேற்று ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பகல் 12 மணிக்கு தொடங்கி மாலை 4 மணி வரை இப்போராட்டம் நடைபெற்றது. பஞ்சாப், அரியானா மாநிலங்களில் இப்போராட்டம் முழுவீச்சில் நடைபெற்றது. லூதியானா அமிர்தசரஸ் உள்ளிட்ட  இடங்களில் போராட்டக்காரர்கள் தண்டவாளத்தில் அமர்ந்து மறியல் செய்தார்கள். ஜலந்தர் கன்டோன்மென்ட் ஜம்மு வழித்தடத்திலும் மொகாலி மாவட்டத்திலும் மறியலில் ஈடுபட்டனர். அரியானா மாநிலத்தில் உள்ள குருசேத்ரா பானிபட் […]

Read More
 எங்கெங்கும் வட இந்தியர்கள்! ஆக்கிரமிக்கப்படும் தமிழகம்!

எங்கெங்கும் வட இந்தியர்கள்! ஆக்கிரமிக்கப்படும் தமிழகம்!

தமிழகம் தவிர வேறெந்த மாநிலத்திலும் இப்படியான ஒரு சூழல் கிடையாது..!  ஜெயலலிதாவும், கருணாநிதியும் அடுத்தடுத்து மரணமடைந்த நிலையில் – மக்கள் செல்வாக்கோ, ஆளுமையோ இல்லாத ஒ.பி.எஸ்-இ.பி.எஸ் ஆகியோர் தலைமைக்கு தமிழக அரசின் அதிகாரம் கைமாறியதைத் தொடர்ந்து தமிழகத்தில் உள்ள மத்திய அரசு பணியிடங்களில் 90 முதல் 99.5 சதவிகிதம் வட மாநிலத்தவர் நியமனம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. வேலைவாய்ப்புகள், வணிகம், நிலம்…அனைத்தும் வட இந்தியர் வசம் சென்று கொண்டுள்ளதை கவனப்படுத்துகிறது இந்த கட்டுரை! ஆனால், இது குறித்த தமிழக மக்களின் […]

Read More